Saturday, January 14, 2017

கானல் நீர்

இல்லாதவற்றை இருப்பதாய் எண்ணித்
தள்ளாடும் தமிழுலகே இந்தப்
பொல்லாத எண்ணங்கள் உன்னை யிங்கே
செல்லாத காசாகச் செய்விக்குங் கொடுமையைக்
கல்லாக உணராது கனவுலகில் வாழ்ந்து
கணக்கின்றித் துய்க்கின்றீர் துயரை நீரே

அண்மையில் மறைந்திட்ட அம்மாவை நீரும்
அதிகமாய்ப் புகழ்ந்திட்டீர் ஆறுதல் அடைந்திட்டீர்
அவர்செய்த தொண்டுகள் எவ்வளவே யானாலும்
அத்தோடு செய்திட்ட எண்ணற்ற கொள்ளைகளை
எண்ணித்தான் பார்த்தீரோ நிறுத்துத்தான் பார்த்தீரோ

நாடகந்தோறும் நல்லோராய் நடிப்போரை
தலைவா வென்றும் தளபதி யென்றும்
மகுடமும் மதிப்புங் கொடுப்பீர் நீரே
நாடக மகற்றி அவர்தம் தகுதி
மதித்துப் பார்த்தீரோ அனு பவித்துப் பார்த்தீரோ

சரியோ பிழையோ எதுவானாலும்
அளவேயிலாது தூக்கிப் பிடித்து
அலட்டிக் கொளாது முன்னோர் போல
ஆய்ந்து அறிந்து நீதி செய்தால்
பாரோர் போற்றும் வல்லவராய்
நாமும் உலகில் நிலை பெறலாம்
2017-01-14 பொங்கல்

No comments: